Tuesday, January 10, 2012

உயிரோசை கவிதைகள்..







நிசப்தம்

என் இரவு மிருகத்தின்
பகல் நாவினை
ருசித்து உண்கிறாய் நீ

கூரை வழி சொட்டும் மழையென
வழிந்து கொண்டிருக்கிறது துயரம்

என் ஒரு துண்டு வானத்தின்
முழு கடலையும் கைப்பற்றி விடுகிறாய் நீ

பிரிவின் சாத்தியங்கள்
இனி எந்தவொரு கோடையிலும்
நம்மில் இல்லை.



நானும் அவர்களும்

கடவுள் வருவதாகச் சொன்ன இரவில்
பால்யன் ஒருவன் மூத்திரம் பெய்கிறான்

தான்யாவின் காதுமடல் மச்சம்
எழுதப்பட்டிருந்தது முன்பொரு காலத்தே
கீதாவின் மருதாணிக் கைகளில்

நான் நானாகித் தொலைத்த தருணம்

பெரு மழை தீர்ந்த கனவில்
வயலின் மீட்டிக்கொண்டிருந்தான் கடவுள்.







நன்றி உயிரோசை




No comments: