Saturday, December 31, 2011

தாகம்





அலைகடலில் மிதக்கும்
நிலவின் வெள்ளொளியில் முகம் காணும்
இரவை கடத்தி படுக்கையில் உலர்த்துவதாய்
கண்ட அந்த அபத்தக் கனவை
சாமத்தின் வாசலில் குரைக்கும்
தெருநாயின் காது திருகி சொல்கிறேன்.

பின்
பின் மதியப் பூனையாய்
அவள் முலையருந்த,
வேட்கை கனலின் விரல்கள் மீது
திரும்புகிறேன்.

கொலுசு கால்களின்
இசை வழியே நிரம்புகிறது
அன்பின் ஊற்று.

No comments: