Wednesday, January 12, 2011

துயர்பறவையின் உடைந்த சிறகு..!






பல்லி விழுந்த பாலெனப்
பருகத் தரப்படுகிறது
கோப்பை மௌனம்.

குறியீடுகள் விழுங்கிய
பாம்பென பாறையென
விம்மித் தும்முகிறது இதயம்.

உச்சபட்ச நிராகரிப்பின் கசப்பில்..

வரைபடத்தின் முனைகள் மடக்கி
கப்பலென செய்து
பால்யத்தில் மிதக்கலாம்
எனப் புலம்புகிறாள்
மென்று துப்பிய நாவும்
சிவந்த கண்களும்
வீங்கிய கன்னங்களுமாய்
தோல்விப் பெண்..!

நன்றி உயிரோசை..

2 comments:

தூயவனின் அடிமை said...

என்ன கவிஞரே,நலமா?

உயிரோடை said...

கவிதை நன்று. வாழ்த்துகள்