Monday, April 19, 2010

அரேபிய ராசாக்கள்..10



பெருமழைக்குப் பிறகான கருத்த வானத்தைப்போலவோ..
பிரளயத்தில் இடம்பெயர்ந்த சிறுதவளையினை யொத்தோ..
ஒற்றைச்சலிப்பில் ,
உயிர் மறுத்தது.. மூச்சின் வெம்மையினை..!

பின்..
தனிமையின் ஜன்னலில்..
இரவை நெரித்து நெருங்குவதாய்
வரையப்படுகிறது இத்தாகம்..!

இப்பிரிவின் வலியென்பது..
மழலை புன்னகை பிரசவிக்க வாய்ப்புமறுதலித்த
விலையுயர்ந்ததொரு பொம்மையைப் போன்றதென
அறிந்திருக்காமல் விட்டிருந்தேன்
விமானத்தில் பறத்தலின்போதோ !!

கடந்த முழுஆண்டு தாகத்திற்குக் கிடைத்த
கொழுத்த இரையாக ..
சொல்லொலி முத்தங்கள்!
இவ்வரேபிய அறைமுழுதும் அலைந்தாடுகிறது
மூச்சுவிட நேரமற்று ...!!

வாங்கித்தரா புதுகொலுசைக் காரணங்காட்டி
இன்றிரவும் அவளுடன் பிறந்தநாள் கொண்டாடலாமென..
வெளிச்சத்தின் மிகக்குறைந்த ஒளி ,
தொலைபேசியிலொரு பூங்கொத்தையோ
கிறுக்கல்கள்மொழியுடன் கூடிய கடிதத்தையோ
நிரப்பிவிட்டு நிசப்தமாகிறது..!

 http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2808

நன்றி  உயிர்மை.

No comments: