Thursday, April 15, 2010

பொம்மைக்கவிதைகள்!!


மழலைகளின் புன்னகை கண்டு
பாலையெங்கும் பொம்மை சொட்டும்
அதீத அற்புதமுண்டு !

மழலைகளின் அழுகை
பல்லாயிரம் தோல்வி பொம்மைகளை
நிர்மாணிப்பதும் உண்டு !

ஒரு வீட்டில் கண்டது!
அண்ணன் ஒழிக்கிறான்
தங்கை அழுகிறாள்
மூக்குச்சப்பிய பொம்மை ரசிக்கிறது !!

முத்தமிடும் குழந்தை
முத்தம் கேட்கும் குழந்தை
பரிசு பொம்மை
எவை அழகு !

பல்முளைக்கா மழலை
பாடும் பொம்மை
இரண்டும் அழகு !

குறிப்பாக இதைச்சொல்லியாக வேண்டும்
குழந்தைகளும் பொம்மைகளும் ஒன்றென
நிச்சயிக்கும் வண்ணம்
உடைமாற்றி ரசிக்கின்றனர் பலர் !

வயிறு தள்ளாது
குழந்தை பெற்கும்
பொம்மைக்கவிதை அழகோ அழகென
யாரோச்சொல்வது
ஷ் ஷ் ஷ்.. ரகசியம்.. !!

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=5743:2010-04-15-03-51-04&catid=2:poems&Itemid=265

நன்றி கீற்று.. 

6 comments:

நேசமித்ரன் said...

:)

நல்லா இருக்கு

Unknown said...

ம்.. ரொம்ப நன்றி நேசமித்ரன்

Matangi Mawley said...

beautiful sir!

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

அழகு :)

-ப்ரியமுடன்
சேரல்

Unknown said...

நன்றி Matangi Mawley..

Unknown said...

நன்றி சேரல்..