Wednesday, February 24, 2010

காரணங்களற்ற புரிதல்கள்..


காற்றைப் புறந்தள்ளி நகர்ந்தோடும்
துண்டு பேப்பரொன்றின் பின்பாக
விழாமல், வீதியில் குழந்தைகளிரண்டு..
சாக்கடைக்கு கொஞ்சம் முன்பு
நீலச்சட்டை பையன் முந்திகொண்டான்,
பச்சைபாவாடை தங்கச்சி அழுமுன்
ரஜினிகாந்த் சிரிப்பு மூட்டினார் , அண்ணனுக்கு
சிவாஜியின் கட்டபொம்மன் தலைதான் வேணுமாம்..

ஒற்றுகேட்டு கொண்டிருப்பவன் சொல்கிறான்,
மாடிவீட்டு பிள்ளைகளுக்கு
ரஜினியின் பிய்ந்த உதடுகளையும்
சிவாஜியின் தலைதுண்டுகளையும்
கம்ப்யுட்டர் கேம்ஸ்ல
ஒட்டி விளையாடத்தான் பிடிக்குமாம் !


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=4117:2010-02-24-03-56-38&catid=2:poems&Itemid=88

நன்றி கீற்று..

No comments: