Thursday, December 17, 2009

கிளிவிடு தூது..


கூண்டுகிளியின் கதவு திறந்துவிட்டு
ஐய், கிளி..கிளீ.. பறந்துபோச்சென..
சிரித்து ஓடி ஆடுகின்ற
தன் மழலைபெண்ணின்
புன்னகையை இறுகபற்றி ,
படியிறங்கி செல்கின்ற கைம்பெண்ணினது
ஆதிஇரவின் இயலாமை
மௌனபட்டு துவங்கும்
இச்சிறுபொழுதினில் ,
தேடுகிறேன் நானும் ..
பாடுபொருளென்பதாதையும்,
கவிதையெனப்படுவதையும் .