Monday, December 7, 2009

இதொரு காதல் காலம்..!




காதலெனும் வன்ஆயுதம்
மூலப்பொருளாகி .. இதயம் பிடுங்கி
பாதங்களிலொட்டி சென்றவளை
பெருங்கடலென சீறும்
இரத்தம் தேடிதிரிய ..

நகமென வளருமேயெனயிருந்த புரிதல் ,
வடியும் இரத்தமினை
கண்களின் கீழே
உதடுகள் பருக.. வழியவிட்டவண்ணம்
தோற்றழுக ..

இயல்பாய் , பொருந்தா பிரிதொரு
இதயம் பொருத்தி
இயல்பை புறந்தள்ளி
காலி உடம்பினில்
உயிர் சொருக
பக்குவபடாது ..
பாடலொன்றும் , பாடமென்றும் ..
முயன்று முடியாது ..
காதல் வலிக்க
வாழ்வு தேடிதிரும்பும் இப்பெரும்பொழுதினில் ..

காதல் பிரளயமாகி
பெருங்கடலென சீறும் இரத்தம்
அவளும் அடையாது ..
மடிந்திருப்பாளென்றே நம்புகிறேன் .!

No comments: