Saturday, November 14, 2009

என் மனைவியின் திருமணம்..!



தேவமகளின் ஆசியுடன்
பெண் வேடமேற்று..
அமைதி புருவங்களுடன்
அழகாய் ஏந்தியிருந்தாள்
வெட்க புன்னகை..!

மருதாணி சிவந்திருந்த உள்ளங்கை
ஓசையின்றி கவியெழுதியவாறு
தொடர்ந்திருந்தது..!

நெற்றியோடு நெளிந்திருந்த சுட்டி
வாழ்த்தும் மலர்களிடிம்
அவளை வாசிக்க, நெகிழ்ந்தது..!

தேங்கிய காதல்
தாங்கிய காமம்
வாசம் நுகர்ந்ததாயிருந்தது
நீலநிற பட்டினது..!

சற்றே சலனமின்றி
நிறமறியா பயமாய்
இலேசாய் வியர்த்திருந்தாள்
இந்த வேடிக்கைபொம்மையை
கண்ட கணம்..!

ஐயரவரின் மந்திரம்
தீர்வதாயிருந்தது..
அந்நேரம்..தாலி
மந்திரம் துவக்கியது
கணாளன் மணவாளனுக்குபோக
இனி நான் மீதியென..!

2 comments:

தேவன் மாயம் said...

தேங்கிய காதல்
தாங்கிய காமம்
வாசம் நுகர்ந்ததாயிருந்தது
நீலநிற பட்டினது..!
//

ரசனை வரிகள்!!

Unknown said...

தேங்க்ஸ் நண்பரே..