Tuesday, September 29, 2009

ஓருயிரின் வலி..
















தேவதைகளுக்கென்றேயான

வெள்ளாடை களைந்து
எனையீர்த்த கருநிற உடையணிந்து
மெல்ல இசையுடன் வருபவள்
விரல்கள் இறுகபற்றி
உயரே பறப்பேன்..

அப்பொழுதினில் அவளது அழகான
குட்டி இதயத்திலிருந்து
கதையோ கவிதையோ திருடுவேன்..
கூடவே ஒருசில முத்தங்களையும் சேகரிப்பேன்..

காற்றின் ஈரம்
தீரும் தருணம்
அவளெனை இறுக்க கட்டிகொள்வாள்
நானவள் மார்போடு
என்முகம் பதித்து
கனா காணதுவங்குவேன்..

அவளோ ; தேவதையானவள்
காமம் ரசித்ததில்லையென
அவளோடு எனையும்
அதனுள் அமிழ்த்துகொள்வாள்..

குறைந்தபட்ச நொடிகளோ
அதிகபட்ச நிமிடங்களோ
காமத்தின் பசிக்கு
உயிர்கொடுத்து..பின்
தாமதமேதுமின்றி..
அவள் வாய்வழி ராஜகுமாரன்
என்னுள்ளங்கையில் வந்திறங்குவான்..

அன்றிரவு
விண்மீன்களும் நிலாவும்
விடுமுறைதினமாக ஏற்றுகொள்ளும்..
மழை மட்டும் பணியெடுக்கும்..

ஆகாஷம் முழுதும்
மூவர் மட்டும் கொண்டாடும்
திருவிழா தொடங்கும்..

இரவு தீரும்
கனவு முற்றும்
நண்பனும் நானும்
அடுத்த..அடுத்த..வருடமாய்...
திருமணம் தள்ளியிட்டு தடைபட்டதான
உயிர் அண்ணனுக்கு
பெண்தேட விரைவோம் ..!

No comments: