Thursday, September 24, 2009

போதையின் மிச்சம்..!


காதல் முத்தி
கனவு நைந்து
சடலம் ஈமொய்த்து
கவிதை மறந்து
இரவின் உடைந்த நிழலினில்..

தாழிட்ட கதவின்
ஒளிபூசிய துவாரம்
அம்மணமாய் காமுகன்
அணைத்தபடி எனதவள்..

நேற்றுவரை மைகசிந்த
ஈரம் திங்காது
காற்றினில் கிழிபடாது
உயிர்நீத்த காகிதங்கள்
பத்திரமாக அடைக்கப்பட்ட அலமாரி ;
நான் அவள் அதுவாகிய காதல்..

ஓரோரத்தில்
முன்னொரு ராத்திரியின் எச்சம்
சாமத்தில் கனவுகளோடு என்பிள்ளை..

ஒளிபூசிய துவாரம்
இருள் உமிழ
படுக்கை முனக ;
மாண்டவன்
மாண்டுபோனவன்
மூச்சுமுட்டிய கண்ணீருடன்
சலனமின்றி தடயமின்றி..

அந்தர வானம்
நூல் ஊஞ்சல்
காற்றின் கைகள்
ஆடுபவன் நானே..

No comments: