Monday, September 14, 2009

உயிர்..

யோனி பிண்டம்
வன் லிங்கம்
ஒட்டி ஒழுகி
வயிறு கிழிந்தோ
யோனி விரிந்தோ
விரட்டப்பட்டிருக்கலாம்..

விழுந்தவுடன்
இருமுலை கசாயம்
மூச்சு சொருகி
மார்போடோ
உள்ளங்கையோடோ
ஏந்தப்பட்டிருக்கலாம்..

பின் அது; மெல்ல
நட்பின் கைபற்றி
காதலின் கன்னம் விழுங்கி
முதலுயிர் யோசித்திருக்கலாம்..

வாழ்வின் வாய்க்காலில்
மென் நாக்கோடும்
கொடு பற்களோடும்
நெடுக வழிந்தோடி
மங்கிய வெளிச்சத்தோடும்
கைதடி உதவியினூடும்
சிலகாலம் நடமாடியிருக்கலாம்..

பின்னொரு நன்னாள்
சதைதுண்டம்
மக்கியோ..சாம்பலாகியோ..
போயிருக்கலாம்;
ஆனாலும்..
முதலுயிர் மீண்டும்..
அதே யோனி
அதே லிங்கம்
நீண்டிருக்கலாம்... உயிரொழுகி.

No comments: