Sunday, August 9, 2009

தீர்ப்புகள் திருத்தப்படலாம் ..


மூக்கொழுக மது விழுங்கி
நடுஇரவின் தொண்டை பாலையில்
வாக்குறுதி நாற்றம் வேகமாய்தட்ட
காதலும் கவிதையும்
வாந்தியில் நெளியும் ..

விடியவிட்டு
விரல்கள்நீட்டி கழுவுகையில்
முதல்சந்திப்பும் மௌனமும்
வெட்கமும் சிறுபுன்னகையும்
முத்தமும் கோபமும்
தரையினூடு காய்ந்தழுது படிந்திருக்கும் ..

ஜாதிகொட்டை
தின்று செரித்த
தாய்பறவை எச்சத்தில்
உயிர்தெழுவோமெனவோ .

No comments: