Sunday, August 2, 2009

காதலொரு சாத்தான் கவிதை !!


கக்கயிடுக்கிலும்
உள்நாக்கு எச்சிலிலும்
சம்மணமிட்டுகொண்டு காதல்
பிரிவிற்கான காரணமறிய உந்தினால்
புள்ளியோ .. பூலோகமோ
அகப்படலாம் ...

எழுதி அழுதாலும்
அழுது எழுதினாலும்
கடைசியாய் சிக்கபோவது
கிழிக்கப்பட்ட கடிதங்களும்
செத்துப்போன முத்தங்களும்
பிடிசாம்பலுந்தான் ..

கக்கத்து மயிர்வழித்து
தேங்கிய எச்சிலில்நனைத்து
சாக்கடையில் முக்கினால்
காரணமறிய முயலும் அவகாசம்
கபகபவென எரியும் ;
எரிய நேரம்பிடித்தால்
கைகுட்டையை போடு
மூக்குசளியும் கண்ணீரும்
உதவி கொள்ளும் ..

ஒன்று கூட்டல் ஒன்று இரண்டு
அ ஆ அப்புறம் இ , ஈ .........
இதுபோதாதா வாழ ??


2 comments:

முடிவிலி said...

wow.. super.......

pin-naveenathuvathin vazhiyae parikaasam seithu pogirathu.. ungal kavithai............. vaazhthukkal......

Unknown said...

thank you mamu.. :)