Monday, August 3, 2009

யாரிடம்போய் சொல்ல ?


பூங்கா இருக்கையில்
நமது பெயர்கள் மேல்
நமது பெயர்கள் எழுதி
உஷ்ணமேத்தலாம் ...
பிழையொன்றும் இல்லை
பரிமாறி கொள்ளலாம்
சில சம்பிரதாய சில்மிஷங்களை ..
மழை மாலையில்
காதலினூடே காமமும் கலந்திருக்கலாம் ...
ஓர் நன்னாளில்
திருமண வாழ்த்துக்கள் பெறலாம் ...
விண்ணளவு காதலும்
நிலவளவு காமமும் வைத்து
நட்சத்திர பிள்ளைகள் செய்து
நூறாண்டுகள் வாழலாம் ..............................


கனவுகளுக்கொன்றும் குறைவில்லை
காதலியைத்தான் காணவில்லை ...

No comments: