Sunday, August 9, 2009

கலாச்சாரம் அகல பாதாளத்தில்...


மும்பை வேகவாழ்வினொரு
ஞாயிறு ஒதுக்கி
அழகிய அரபிகடலின்
ஜுஹு கரையோரம் சுற்றலானேன் .,

துப்பட்டா , வெட்கம்
இன்னும் எத்தனையோ
கனம் கூடுதலாம்
வீட்டிலேயே விட்டுவிட்டார்களாம்
சொல்லாமல் சொல்லிபோகிறாள்
பெண்ணொருத்தி !!

எத்தனை முத்தங்கள்
எத்தனை அசிங்கங்கள்
காதலர்களாம் ?!

ஏதோ புத்தகத்தில் படித்து
நம் கலாச்சாரம் கற்கவந்த
வெள்ளைகாரனின் கேள்விக்கு
திக்கிமுக்கி விளக்கிகொண்டிருந்த
பாப்கார்ன் பையனையும்
தேசியமொழிகூட கற்க மறந்த
பாவப்பட்ட இந்த தமிழனையும்
கடந்து செல்கிறாள்
கொஞ்சம் மெதுவாகவே
விலைமகளொருவள் ..

No comments: