Wednesday, August 19, 2009

எச்சில் சமுதாயம் ..


காலி மதுகோப்பை
காலியாகவே நிரப்பபட
புரையேறிய பொழுதினில்
எழுதி தீர்த்துவிடுவதென ..

காதல்
வரம்..? சாபம்..?
நோண்டி நொண்டியடித்து
சாலையோரம் திரிந்தவனிடம்
குப்பைகளை
கண் , காது.. கபாலம்வரை
காயப்படுத்தி திணித்தனர்
பொதுவிட காதல்வாதிகள் ..

மாலை ஒழிய
தலையணையில் தலைசாய்க்க
எதிர்வீட்டு முதிர்கன்னி
ஞாபகத்தில் எழுந்தழ
காதலாவது , கத்திரிக்கையாவது ..

கண்களை இறுக்கி
மூட முயற்சிக்கையில்
வரதட்சணையும் விவாகமும்
புழுக்களாய் நெளிய
சரி, மூத்திரம் களைந்து
மீண்டும் முயற்சிப்போமென
கழிவறையை தாழிட்டால்
வெள்ளை பிசுபிசுப்பிற்கே
எத்தனிக்கிறேன் என்னை ..

எழுதவே கூடாதென்றிருந்த கவிதை
கடைசியில் கழிவுகள் துப்பி
எச்சிலில் நனைய ;
நானும் சாதாரணன்
என்னையும் சேர்த்தே
இச்சமுதாயம் .

No comments: