Sunday, August 16, 2009

கற்பனை காதலிக்கு ...




காதலே..
காதலிக்க ஆசையா உனக்கு
கொஞ்சம் கண்ணை திற
என் காதலி வீதிவருகிறாள்...

அன்பின் ஆதாரங்கள்
நம்மிலிருந்து தொடங்கட்டும்
நானும் நீயும் காதல்செய்வோம் வா...

நான் நீ காதல்
மூவரும் இணைந்து விடுவோம்
திருவிழா இனி தினமும் தொடங்கட்டும்...

அட என்ன இது
ஊரிலுள்ள பெண்களெல்லாம்
உன் வீட்டு வாசலில்
ஓ..வெட்கம் வாங்க வந்தார்களாம்...

ஊரே வேடிக்கை பார்க்கபோகிறது
சாமி கண் திறக்கிறாராம்
நேற்று நீ கோவில் போனாய் என்பதை
உடனே எல்லோருக்கும் சொல்லியாகவேண்டும்...

பூக்களுக்குள் சண்டை மூட்டாதே
இனி நானே கொண்டுவருகிறேன்
உனக்கான பூக்களை ...

அட... உணர்ச்சிவசப்பட்டு
ஆணிகளை உதைத்துவிட்டு
உன் முகம் காண
கண்ணாடி கீழிறங்கி வருவதை பார்!!

சிறுபிள்ளைகள் போல்
அடம்பிடிக்கும் மருதாணிஇலைகளை பார்
தினமும் மாலைவேளையானால்
உன் உள்ளங்கை வேண்டுமாம்!!

இந்த நடனத்தை பார்
தேம்பி தேம்பி அழுவதை
உன் கால்கள் வேண்டுமாம்
வாழ்நாள் கடனாக!!

காற்றும் ஆசைப்படுகிறதோ
உன்னை காதலிக்க
எவ்வளவு அழகாய்
சண்டைபோடுகிறது துப்பட்டாவோடு!!

தீரதீர நான் தருகிறேன்
அடிக்கடி முத்தம் கொடுத்துகொள்
சின்ன குழந்தைகளுக்கு ...

தேவதைகள் மஞ்சள், சிவப்பு ..
வண்ண ஆடைகளும் உடுத்துமென்பது
உன்னை பார்த்தபின் தெரிந்து கொண்டேன் ..

ஒருமுறை நீ நனைந்தாய்
இப்பவும் மூடப்படாத ஜன்னல்கதவுகள்
மறுபடி மழை எப்போவரும் !!

தேவதை சிறகுகள் விற்பனைக்கு
என்ன வேடிக்கை பார்கிறாய்
அது நீ கிழித்துபோட்ட மிட்டாய்தாள்கள்தான் ..

இன்னும் ஒரேயொரு வாய்ப்புகொடு
நானும் பழகிகொள்கிறேன்
நகம் கடிக்க ..

உன் புருவங்களை காட்டிவிட்டுபோ
இங்கே பிறைநிலா காண
பயங்கர கூட்டம் ..

உனக்கெழுதிய கடிதங்களெல்லாம்
முதிர்கன்னிகளாக எனது பெட்டியில்
என்று மௌனம் கலைக்கபோகிறாய் !!

நான் ஆண்
நீ பெண்
வேறென்ன வேண்டும் காதலிக்க ??

வெட்கத்தின் வெப்பம்
மௌனம் உடைத்து
முத்தமாய் விழும்
காதலின் அடியாளமென ..

காமத்தின் பெருமை
பெருகுமோ ?
நம் காதலின்
உதவியால்!!

நான் பாதை
நீ பாதம்
உணர்வதில்லை காதல்
விதி வலி...

நான் எழுதுகிறேன்
நீ படிக்கிறாய்
காதல் ரசிக்கிறது ..

வார்த்தைகள் நீ
எழுதியது நான்
பரிசு கவிதைக்கு ..

காதல்
உனது அசிர்வதிக்கப்பட்டது
எனது சபிக்கப்பட்டது
மறைமுக தூதுவனாய் நான்!

No comments: