Wednesday, July 29, 2009

"வேசிகளும் கடவுளின் குழந்தைகள்தான்"

காமம் விற்கப்பட்ட
ஓர் அழுக்கு இரவினில்..

யாரை குறைசொல்ல
ஒவ்வொருத்திக்கும்
ஒவ்வொரு கதை!!

மொத்தமாய்
விதியை
பலியிடுகிறோம்!!

எங்கிருந்து கற்றேன்
இமைகளோடு உதடுகளும்
கூடிகுவிந்த இந்த
புதுவகை புன்னகை!!

மனித குரங்குகளின்
அசிங்க ஆட்டம்
சில நூறுரூபாய்களோடு!!

மாத கடைசிகளில்
ஏழை போதகனும்
போற்றி அனுப்பபடுகிறான்
சில,பல வக்கிரமான திட்டுகளோடு!!

அழகி ... நீ
கொஞ்சும் வழிபோக்கன்
கொஞ்சம் அதிகமாகவே
இன்பம் வாங்கி செல்கிறான்!!

வருங்காலம்
வெட்கம் என்ற
ஒன்றே மறக்கும்
எங்கள் இனபெண்களுக்கு!!

ஒவ்வொரு முறையும்
மரண ரணம்...
உடல் விற்கிறோம்
வயிறு நிரம்பவே...

ஒருமித்த ஆசையில்லை
வருபவனுக்கெல்லாம்
எங்கள் ஆசைகேட்க
எவனுமில்லை..

விசித்திர குரங்குகள்
வாசல் தட்டுமோ
விதி நொடிக்க ?

நல்வாழ்வு பிறக்குமோ
நாங்களும் கடவுளின் குழந்தைகள்தான் !!

No comments: