Monday, July 27, 2009

தவம்



மறு ஒருமுறை
மனம் ஏங்குகிறது
மழை உனை ரசித்த
இந்நாளுக்காக !


உன் சிரிப்பின் வெளிச்சத்தில்
காணாமல்போன மின்னலுடன்
இணைந்து கொண்டது
என் வெறுமையும் !


ஈரம்பட்ட உன் துப்பட்டா
வெட்கத்தில் வழிகிறது
என் உதடுகள் !


உன் பாதங்கள்
நட(ன)மாடுவதை பார்த்தபின்
என் விழிகள் மோட்சத்தில் !


உன் கொலுசொலி கேட்டபின்
இடி - இடிப்பதை
சற்றுநேரம் நிறுத்தி கொண்டது
என் காதல்கடவுளின் ஆணையால் !


மழை எப்பொழுது நிற்குமென்றாய்
சின்ன குழந்தையை போல
நின்று போனது - இருமுறை
என் இதயம் !


பொல்லாத விழிகள் கொண்டு
எனது மௌனத்தை
விமர்சித்து சென்றாய்
நான் சிலையானேன் அங்கேயே !


இசை ப்பிரியனாகிறேன்
நீ பேசியதை தொடர்ச்சியாய்
அசைபோட்டு கொண்டிருப்பதால் !


விழிகள் மூடி
யாசிக்க தொடங்குகிறேன்
மறுமொருமுறை
இதே மழை நாளுக்காக !


No comments: