Sunday, July 26, 2009

மனம் கோணல் ??


பகிர்தல் கொண்டோம்
காதல் பிறப்பித்தோம்...

சந்தோஷ தருணங்கள்
நமது கரங்கள் பற்றி
அழைத்து சென்றது
ஆழமான அற்புத உலகிற்கு...

ஓர் பிரகாச நாளில்
பிரிவதர்கான காரணங்கள்
அறிய முற்பட்டோம்...

திருட்டு புன்னகையுடன்
விரல்களை நகர்த்தி
விதியென்று வருந்தினோம்
காதலை தோற்பித்ததற்கு...

ஓர் மாலை பொழுதினில்
தனிமை விருப்பமின்றி
பூக்களோடு ரகசியம் உரைக்கிறேன்
உன் நினைவுகளை கொல்கிறேன்...

உணர்வுகள் அதேயாயினும்
உனது உருவம் புதியதே !!!

ஏனென்று கேள்வி பதிக்க
ஆயிரம் வாய்புகளிருந்தும்
அதனை தேடமுயற்சிப்பதில்லை மனம் !!!

No comments: