Thursday, July 23, 2009

மழலை...



உந்தன் சிறியதாய் துளிர்விட்ட
தலைமயிர்கள் தடவும் தருணங்கள்
அகராதியில் எங்கு புரட்டியும்
கிட்டவில்லை வார்த்தைகள்...

சின்னதாய் புருவங்கள் சுருக்கி
விழிகள் விலக்கி
நீ பார்க்கையில் தோன்றபெறுகிறது
அதிசயங்களெல்லாம் அதிசயங்களல்ல...

ஆயிரம் ஓவியங்கள்
ஒன்றாய் கூடியதுபோல்
காதுமடல்கள் உனது...

ஒட்டுமொத்த காற்றும்
ஏங்கி பிணைகின்றன
உன்னை சுவாசமுத்தமிட...

பனிக்கட்டி பற்கள் காட்டி
இத்தணுன்டு நீ சிரிக்கையில்
பூ பூக்கும் பாலைவனம்...

மொத்த விண்மீன்களின்
வெளிச்சம் விழுங்கிவிட்டதோ
விவரிக்க இயலா பிரகாசமாய்
உனது முகம்...

இதுவரை கிடைக்கப்பெறா ஆனந்தம்
உந்தன் பிஞ்சு விரல்களின் ஸ்பரிசத்தில்
உள்ளூர உணர்கிறேன்...

தத்தி தத்தி
தவழும் பஞ்சு பாதங்கள்
கடவுளை கோபிக்கும் மனம்
கண்கள் இரெண்டு போதாதே...

நீ மிரட்டும் செல்லதொந்தரவுகள்
உயிர் மறக்கிறேன்
புதியதாய் பிறக்கிறேன்...

உன்னோடு நான் வாழும்
அந்த பொழுதுகள்
நிலப்பாடில்லாமல்
விரிந்து கொண்டே செல்லும்
என் வானம்.....................

No comments: